search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகவதி அம்மன்"

    • 15-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
    • அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவ ராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்கு கிறது. இந்த திருவிழா 24-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் அதி காலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    11.30 மணிக்குஅலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை யும் நடக்கிறது. 1-ம் திருவிழாவான 15-ந்தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    8 மணிக்கு பஜனையும், மாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு ஆன்மீக அருள் உரையும், இரவு 7 மணிக்கு வயலின் இசையும், இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலை மான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    2- ம்திருவிழாவான 16-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீகஅருள் உரையும் இரவு 7மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 3-ம் திருவிழாவான 17--ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாக னத்தில்எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 4-ம் திருவிழாவான 18-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் காமதேனு வாக னத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 19-ந் தேதி மாலை 6 மணிக்குஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும், 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்காம தேனு வாகனத்தில் எழுந்த ருளி பவனி வருதலும் நடக்கிறது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் மீது கூடை-கூடையாக மலர் தூவி வழிபடுவார்கள்.

    6-ம் திருவிழாவான 20-ந்தேதி காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பரத நாட்டியமும் 9 மணிக்கு அம்மன் வெள்ளி க்காம தேனு வாகனத்தில் எழுந்த யருளி பவனி வருதலும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 21-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும், 9 மணிக்கு அம்மன் வெள்ளி இமயகிரி வாகனத்தில் எழுந்திருளி பவனி வருத லும் நடக்கிறது. 8-ம் திருவிழாவான 22-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 23-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கி றது.

    அதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதான புரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கி றது. கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவே கானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமாத்தலிங்கபுரம், தங்க நாற்கரசாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதான புரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்றடைகிறது.

    அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்க புரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப் பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்க மத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணை யர் ரத்தினவேல் பாண்டி யன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார், சுந்தரி, துளசிதரன் நாயர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வரு கிறார்கள்.

    • அறங்காவலர் குழுவினர் ஆய்வு
    • பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

    மணவாளக்குறிச்சி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. கடந்த 2021 ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவ றைக்கூரை திடீரென தீப்பி டித்து எரிந்தது.

    இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 14- ந்தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து இதற்காக தேவசம் பள்ளி வளாகத்தில் மர தச்சு தொழிலாளர்கள் முழு மூச்சில் மரப்பணி செய்து வந்தனர். மேற்கூரை பணிக்கு உத்திரம்,பட்டியல் கூட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து மூலஸ்தான மேற்கூரைக்கு திருப்பணிகள் திருக்கோயில் வளாகத்தில் நடந்து வருகிறது. வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள மர அழிகள் மற்றும் 9 அடி உயரத்தில் 14 கல் தூண்கள் நிறுவும் பணிகள் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கி யது. தூண்கள் நிறுவும் பணிகள் நிறை வடைந்து உள்ளது. தொடர்ந்து பழமை மாறாமல் மர அழிகள் அமைக்கும் பணி களும் நடந்து வருகிறது. அழிகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததும், அதன் மேல் உத்திரங்கள் நிறுவப் பட்டு, அதற்கு மேல் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடங்கும். இதற்கு பயன்படுத்தும் மரங்கள் தேக்கு மரத்தி லானது என்பது குறிப்பி டத்தக்கது.

    இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதம் கலசாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தச்சுப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கோயில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், மராமத்து பொறி யாளர் அய்யப்பன், அறங்கா வல் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    • 120 அடி உயரம் 60 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம்
    • கட்டுமான பணிகளுக்கான மண் பரிசோதனை, கோபுரம் அமைப்பு உள்ளிட்டவை ஆராய்ந்து ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில் :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும்ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்நிலையில் அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதனைத் தெடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 60 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதேபோல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்தில் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்க பல்வேறு ஆயுத்த பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் செய்து வரு கின்றனர். இந்நிலையில், மாநில வல்லுனர் குழு வடிவமைப்பு பொறியாளர் முத்துச்சாமி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கோபுரம் அமையவிருக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர்.

    இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆனந்த், உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்ட னர். இதில் கோவில் கோபுரம் கட்டுமான பணிகளுக்கான மண் பரிசோதனை, கோபுரம் அமைப்பு உள்ளிட்டவை ஆராய்ந்து ஆய்வு செய்தனர்.

    • பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
    • உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நா ட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    இங்கு வரும் பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும், கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் திருக்கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், நாகர்கோ வில் இந்து சமய அறநிலை யத் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பொருளாளர் கண்ணதா சன், கணக்கர் முருகையா ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.74 ஆயிரத்து 573 வசூல் ஆகி இருந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளா கத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எண்ணப்ப ட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அலங்காநல்லூர் அருகே பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் 'நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 2 கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நடுப்பட்டி கிராம பொதுமக்கள், செய்திருந்தனர்.

    • 10 நாட்கள் நடக்கிறது
    • வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்ம ன்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவரா த்திரி திருவிழா நடைபெறு வது வழக்கம் அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவருகிற15-ந்தேதி தொடங்குகிறது. 24-ந்தேதி வரை 10நாட்கள்தொடர்ந்து நடக்கிறது

    .1-ம்திருவிழாவான15-ந்தேதி காலை 7-45 மணிக்கு மேல் 8- 45 மணிக்குள் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும் காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11- 30 மணிக்கு அலங்கார தீபாராதனையு ம்மதியம்12 மணிக்கு சிறப்பு அன்ன தானமும் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவும் இரவு பாட்டுக் கச்சேரி நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பட்டிமன்றம், பரதநாட்டியம், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி களும்நடக்கிறது.திருவிழா நாட்களில்10நாட்களும் இரவு8-30மணிக்குஅம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    1-ம் திருவிழா வான15-ந்தேதிமுதல்3-ம் திருவிழா வான17-ந்தேதி வரை இரவு 8-30 மணிக்கு அம்மன் வெள்ளி க்கலை மான் வாக னத்திலும் 4-ம்திருவிழாவான18-ந்தேதி முதல்6-ம்திருவிழா வான20-ந்தேதி வரைஇரவு8-30மணிக்கு அம்மன் வெள்ளிக்கா மதேனு வாகனத்திலும்எழுந்தருளி கோவிலைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.7- ம் திருவிழா வான21-ந்தேதிஇரவு8-30மணிக்கு வெள்ளி இமய கிரி வாகனத்திலும் 8-ம் திருவிழா வான 22-ந்தேதி இரவு 8-30 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    9-ம் திருவிழா வான23ந்தேதி இரவு 8-30 மணிக்கு வெள்ளி கலைமான் வாக னத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழா வான24-ந் தேதி கால10-30 மணிக்குமேல்10-45மணிக்கு ள்அலங்கார மண்டபத்தில்அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி க்கும் நிகழ்ச்சி நடக்கி றது. அதை தொடர்ந்து மதியம்1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளி க்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகா னந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், மகாதானபுரம் தங்கநாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாகமாலை6மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது.

    அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்க புரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில்5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்டதிருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன்நாயர், ஜோதிஷ்குமார், சுந்தரி நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த்மற்றும்கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் நிர்வாகத்தினர் பக்தர்கள் சங்கத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன.
    • ஒரு கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைத்தன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன.

    இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டி யல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. நிரந்தர உண்டி யல்கள் கடந்த மாதம்30-ந்தேதி திறந்து எண்ணப்ப ட்டது.

    இந்த நிலையில் 25 நாட்களுக்கு பிறகு 17 நிரந்தர உண்டியல்களும் குமரி மாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் ரத்தின வேல்பாண்டியன், குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்ரா ஜேஷ்கு மார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கணக்கர் கண்ணதாசன் பொருளாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் இன்று காலை திறந்து எண்ணப்பட்டது.

    இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாவர்கள், குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திசெவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்ட னர். இந்த உண்டியல் மூலம் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 939 வசூலானது. மேலும் ஒரு கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைத்தன.

    • வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 24-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. திருவி ழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்கார தீபாராதனை, வாகன பவனி, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம், சிறப்பு அன்ன தானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 24-ந்தேதி நடக்கி றது. இதையொட்டி அன்று மதியம் 1 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. இதை யொட்டி மகாதானபுரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஏராள மான மிட்டாய் கடைகள், வளையல் கடைகள், ஐஸ் வியாபாரம், விளையாட்டு சாதன பொருட்கள் கடை கள், ராட்சத ராட்டினம், சிறுவர்கள் விளையாடும் சறுக்கு விளையாட்டு மற்றும் சுழலும் ராட்டினம் உள்பட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்க ளும் இடம்பெறுகின்றன.

    இந்த பகுதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த பகுதியில் திருவிழா காலங்களில் கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு இந்து அறநிலையத்துறை ஏலம் விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஒரு நாள் மட்டும் திருவிழா கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.

    குமரி மாவட்ட கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், ஆய்வாளர் சரஸ்வதி, கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில் ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் அலுவலகத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.

    திருவிழா கடைகள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சுசீந்திரம் அக்கரையை சேர்ந்த குமார் என்பவர் இந்த திருவிழா கடைகளை ஏலம் எடுத்துள் ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதி மற்றும் நாகர் கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதி மகாதானபுரம் பரிவேட்டை மண்டபம் அமைந்து உள்ள பகுதி, பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

    • சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.
    • இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும், 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கி றார்கள். பழமை வாய்ந்த இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோ புரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி நடந்தது. அப்போது பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண் டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபி ஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணி யை தொடங்க வேண்டும் என்றும், சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற் காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை (22-ந்தேதி) கணபதி ஹோமம் நடக்கிறது. இதற்கிடையில் பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும், 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது. இந்த ராஜகோ புரத்தின் மாதிரி வரை படத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வழங்கினார்.

    • தொல்லியல் ஆலோசகர் பார்வையிட்டார்
    • 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி களும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது.

    அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கி கொள்ளலாம் என்று தேவ பிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தொல்லியல் துறை ஆலோசகர் மணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்பட உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதேபோல கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் கட்டப்படும் இடத்தையும் தொல்லியல் ஆலோசகர் மணி பார்வையிட்டார்

    • தேவப்பிரசன்னத்தில் தகவல்
    • பஞ்சலோக விக்கிரகங்களில் கால் மற்றும் கை பகுதிகளில் சிறுசிறு கீறல்கள் உள்ளது அதனை மாற்ற வேண்டும்

    கன்னியாகுமரி :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நா ட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோ புரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையா கவே இருந்து வருகிறது. அஸ்தி வாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது.

    காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேவப்பி ரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. திருவனந்த புரத்தை சேர்ந்த சூர்யானந்த் சர்மா, சசிதர சர்மா, நடராஜ அய்யர், பத்மநாப அய்யர் ஆகிய 4 நம்பூதிரிகள் தேவ பிரசன்னம் பார்த்து அருள்வாக்கு சொன்னா ர்கள். மணலிக்கரைமாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ சஜித், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ரா மகிரு ஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, ஜோதீஸ்வரன், நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்கா ணிப்பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், திருக்கோவிலூர் மராமத்து பிரிவு பொறி யாளர் ராஜ்குமார், மண்டல ஸ்தபதி செந்தில், முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தேவப்பிரசன்னத்தின் போது கேரளநம்பூதிரிகள் வெற்றிலை மூலமும் சோவியை குலுக்கிபோட்டு பார்த்தும் சொன்ன அருள்வாக்கு முழு விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி கடற்கரையில் தவக்கோல த்தில் பகவதி அம்மன் வீற்றிருப்பதால் இந்த கோவில் அதிக சக்தி வாய்ந்த கோவிலாக திகழ்கிறது. முனிவர்களும், ரிஷிகளும், மகான்களும், சித்தர்களும் தவசு இருந்து முக்திபெற்ற தலமாகும். திருமணம் முடியாமல் இருக்கும் கன்னி பெண்களுக்கு இந்த கோவிலில் தொடர்ந்து 11 வாரம் சுயவரம் அர்ச்சனை செய்தால் திருமணம் நடக்கும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு வருவதற்கு இந்த தலத்தை நாடி வந்தால் வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்க வேண்டும் என்று இந்த கோவிலில் வந்து தரிசனம் செய்தால் வேலை உடனடியாக கிடைக்கும்.

    இந்த கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்ப டாமல் பாழாகி கிடக்கிறது. அதனை உடனடி யாக சீரமைத்து தெப்ப திருவிழாவை ஒழுங்காக நடத்த வேண்டும். இந்த கோவிலின் சன்னதி தெருவில் அமைந்துள்ள பாபநாச தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு அந்த குளத்தில் இருந்து கோவிலுக்கு சுரங்கப்பாதை வழியாக வந்து தான் மேல் சாந்திகளாக இருக்கும் போற்றிமார்கள் அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்த வேண்டும். ஆனால் அந்த பாபநாச தீர்த்தகுளம் இன்று கழிவு பொருட்கள் கலந்து சுத்தம் இல்லாமல் உள்ளது. அதனை உடனடியாக சுத்த ப்படுத்தி மேல் சாந்திகள் அங்கு குளித்துவிட்டு வந்து தான் பூஜை நடத்த வேண்டும்.

    கோவிலில் உள்ள கொடிமரத்தில் கீறல் விழுந்து சேதமடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். தங்க கொடிமரம் வைக்கலாம்.

    அம்மனின் பஞ்சலோக விக்கிரகங்களில் கால் மற்றும் கை பகுதிகளில் சிறுசிறு கீறல்கள் உள்ளது அதனை மாற்ற வேண்டும். இந்த கோவிலுக்கு ஸ்தல விருச்சமாக கன்னி மூலையில் சந்தன மரம் நட வேண்டும். கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும். மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும்பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு தேவ பிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    • இன்று காலை தொடங்கியது
    • பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

    கன்னியாகுமரி, செப்.17-

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருந்திரு விழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பயனாக தற்போது பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

    இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார். இந்த நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்த தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    கோவில் கொலு மண்டபத்தில் நடந்த இந்த தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த 5 நம்பூதிரிகள் பங்கேற்று தேவபிரசன்னம் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ்வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    ×